திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகே உள்ள தலையாரிபாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் மாசிலாமணி மனைவி சந்திரா(50). இவரது மகன்கள் இளையராஜா (27), இளவரசன் (25). தற்போது பெய்த மழையால் தங்களது கூரை வீட்டின் சுவர் கரைந்ததையடுத்து, அங்கு தகரம் வைக்கும் பணியில் நேற்று மாலை இளையராஜா மற்றும் இளவரசன் ஆகியோர் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக பக்கத்து வீட்டில் வசித்து வரும் சந்திராவின் தம்பி பாரி(45) என்பவர் பணியில் ஈடுபட்டார்.