சென்னை: குழந்தைகளுக்கு ப்ரீ-ஸ்கூல் முறை சிறந்த அடித்தளத்தை உருவாக்கும் என காசா கிராண்ட் கல்வி நிறுவன் மேலாண் இயக்குநர் அருண் தெரிவித்தார். காசாகிராண்ட் குழுமம், காசா கிராண்ட் பிரைட் கிட்ஸ் என்ற பெயரில் கல்விதுறையில் தற்போது தடம் பதிக்கிறது. இந்த கல்வி மையம் சென்னை திருவான்மியூர் பேவாட்ச் பவ்லிவார்டில் தொடங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் உளவியல் சார்ந்த வளர்ச்சிக்கு இந்த கல்வி மையம் உதவியாக உள்ளது. உலகளாவிய கல்வித் திட்டத்தை பின்பற்றி இங்குள்ள ஆசிரியர்கள் கற்பிக்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றனர். மூன்று மாதம் பயிற்றுவிக்கும் வகையில் குழந்தைகளுக்கு இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது நிறைய குழந்தைகள் சேர்ந்துள்ளனர். இதன் வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னையில் சிறப்பு விழா நடந்தது. அதில் காசா கிராண்ட் பிரைட் கிட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் தோர்த்தி தாமஸ் வாழ்த்திப் பேசுகையில், ‘‘சீக்கிரம் முடிப்பதே சிறப்பு என்பது எங்கள் குறிக்கோள். அது குழந்தைகளுக்கு வேண்டிய விரைவான தொடக்க கல்விக்கு முற்றிலும் பொருந்தும்’’ என்றார்.