சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பு சட்டத்தில் பிழை இருந்தால், அதை திருத்தும் கடமை நமக்கு இருக்கிறது. ஆனால், பிழை இல்லாத நல்ல அமைப்பை திருத்த முற்படுவது மக்களுக்கும், மக்களாட்சிக்கும் செய்யும் துரோகம். நோயில்லாத மனிதனுக்கு அறுவை சிகிச்சை செய்ய முற்படும் குற்றத்துக்கு நிகரானது, இன்று மத்திய அரசு தீட்டும் சட்டமும், திட்டமும், இந்தியாவை ஒரு சாரார் மட்டுமே வாழும் நாடாக மாற்ற முயற்சிப்பது மடமை. காந்தியின் 150வது பிறந்தநாளை அவரது மறைவு நாளாக மாற்றிவிட்டால், அவர் கனவு கண்ட இந்தியா உரு தெரியாமல் அழிந்துவிடுமா என்ன? முயன்று தோற்றவர், மீண்டும் முயல்கின்றனர்.