சென்னை: தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் ேநற்று நள்ளிரவு மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தி.நகர் வைத்தியராம் தெருவில் பாஜவின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ேநற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் மனு கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளே நுழைந்தார். அப்போது அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள் இரவு என்பதால் நிர்வாகிகள் யாரும் இல்லை. எனவே, நாளை காலை வரும்படி கூறி அனுப்பினர். ஆனால், இளம்பெண் வெளியே செல்லாமல் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.