விழுப்புரம்: விழுப்புரம் அருகே வெள்ளிகொலுசை திருடி அடமானம் வைத்து மதுகுடித்த கணவனை பாசக்கார மனைவி பெட்ரோ ஊற்றி தீவைத்து கொல்லமுயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(35). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா(32). வெற்றிவேல்(12), ஹரீஷ்(10) என இரண்டு மகன்கள், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் படித்து வருகிறார்கள். செந்தில் சரிவர வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு தினமும் வீட்டிற்கு வருவாராம். இதை சித்ரா கண்டித்ததால் கணவன, மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் சித்ரா கூலிவேலைக்கு சென்றுள்ளார். அவர் வீட்டில் வைத்திருந்த வெள்ளி கொலுசை அடகுக்கடையில் ரூ.1,500க்கு செந்தில் அடமானம் வைத்து குடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்துள்ளார்.