லாகூர்: தீவிரவாதத்துக்கு நிதி திரட்டிய வழக்கில், ஹபீஸ் சயீத் உள்ளிட்ட நால்வர் மீது பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர், குஜ்ரன்வாலா, முல்தான் ஆகிய இடங்களில் தீவிரவாதத்துக்கு நிதி அளிப்பதற்காக அறக்கட்டளைகள், லாப நோக்கமற்ற அமைப்புகளின் பெயரில் நிலங்கள் மற்றும் சொத்துகளை பெற்றதாக, மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவனான ஹபீஸ் சயீத் உள்ளிட்ட நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண போலீசார் அவர்கள் மீது 23 வழக்குகளை பதிவு செய்தனர். இதன்பேரில் கைது செய்யப்பட்ட சயீத், கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டான்.