பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் சேதமடைந்த தரைப்பாலங்களை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி உள்ளது. பேரூராட்சிக்குட்பட்ட 7 மற்றும் 8ம் வார்டுகளில் 6 தரைப்பாலங்கள் கடந்த 5 ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்வோர் சேதடைந்த பாலத்தில் தவறி விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.