பாப்பாக்குடி: பாப்பாக்குடி யூனியன் அலுவலகத்தில் இரு வாரங்களுக்கு முன் கனமழையால் வேரோடு சாய்ந்த வேப்பமரத்தை மீண்டும் நட வேண்டும் என இயற்கை நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாப்பாக்குடி யூனியன் அலுவலகம் முக்கூடலில் உள்ளது. இவ்வலுவலக வளாகத்தில் வேளாண்மை துறை, தோட்டகலை துறை போன்ற இயற்கை நலன் சார்ந்த துறைகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் அதிகளவு மரம் நடப்பட்டு வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்த வேப்பமரம் சாய்ந்தது.