மயிலாடுதுறை: சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை வயல்வெளியாக தூக்கிச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழசக்கரநல்லூர் கிராம சுடுகாட்டுக்கு போதிய பாதை வசதி கிடையாது. இதனால் சடலங்களை வயல்வெளியாக கொண்டு சென்று மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுடுகாட்டுக்கு பாதை ஏற்படுத்தி தரவேண்டும் என்று மக்கள் விடுத்த கோரிக்கையை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், சோழசக்கரநல்லூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த அவையாம்பாள்(60) நேற்றுமுன்தினம் இறந்தார். அவரது உடலை அதே பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.