சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின் படி நடத்தலாம் என்றும் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார்.