சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.