சென்னை: சென்னையில் மாநகர பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர் ஒருவர் கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தி.நகர் பேருந்து நிலைய வாசலில் 7ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் பேருந்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தான். வேளச்சேரியை சேர்ந்த குமார் என்பவரது மகன் சரண். இவர் தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை மாநகர பேருந்தில் தனது நண்பர்களுடன் தி.நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். தி.நகர் பேருந்து நிலையத்திற்குள் பேருந்து நுழையும் போது படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் அனைவரும் கீழே குதித்து கொண்டிருந்தனர். அப்போது மாணவன் சரண் என்பவரும் படியில் இருந்து கீழே குதிக்க முயற்சித்துள்ளார்.