டெல்லி: சிறந்த மாநிலங்களவை எம்.பி. விருது திருச்சி சிவாவுக்கும், சிறந்த மக்களவை எம்.பி. விருது முன்னாள் மத்திய அமைச்சர் சாகத் ராய்க்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். மகாராஷ்டிரா மாநில முன்னணி மீடியா குழுமமான லோக்மத் சார்பில், சிறந்த எம்.பி.க்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று நடந்தது. விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். இதில் சிறந்த மாநிலங்களவை எம்.பி. விருது திருச்சி சிவாவுக்கும், சிறந்த மக்களவை எம்.பி. விருது முன்னாள் மத்திய மந்திரி சாகத் ராய்க்கும் வழங்கப்பட்டது.