குரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ குற்றசாட்டு

சென்னை: குரூப்-1 தேர்வுக்கான நேர்காணலில் மோசடி நடக்க உள்ளதாக மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார். நேர்காணலில் பங்கேற்போரின் மதிப்பு எண்களை பேனாவால் எழுதக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. கண்டிப்பாக பென்சிலால் மட்டுமே மதிப்பு எண்ணை எழுத TNPSC உறுப்பினர்களுக்கு அரசு அறிவுறுத்தல் என புகார் எழுந்துள்ளது. மதிப்பு என்னை கணினியில் பதிவு செய்யவும், நேர்காணலை காணொலியில் பதிவு செய்யவும் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: