காரைக்குடி: காரைக்குடி- திருச்சி நான்கு வழிச்சாலையில் தீ விபத்துக்குள்ளாகி எரிந்த நிலையில் நிற்கும் 2 கார்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. காரைக்குடி- திருச்சி நான்கு வழிச்சாலை சூரக்குடி பகுதியில் கடந்த வருடம் கார் ஒன்று சென்று கொண்டிருந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக இறங்கி உயிர் தப்பினர். அக்காரின் உரிமையாளர்கள் ஒரு வருடத்திற்கு மேலாகியும் இதுவரை எரிந்த காரை எடுத்து செல்லவில்லை. அதேபோல் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடந்த மாதம் கார் ஒன்று, ஓடும் போதே ‘தீ’ பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து குன்றக்குடி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் அக்காரும் இன்னும் சாலையோரம் அகற்றப்படாமல் இருக்கிறது.