சென்னை: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சாய்தள பாதையை நிரந்தரமாக்க கோரிய வழக்கில், தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சர்வதே மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகளுக்காக, மெரினா கடற்கரையில் மரப்பலகையிலான தற்காலிக சாய்தளம் அமைக்கப்பட்டு வந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தங்களது சக்கர நாற்காலியில் சாய்தள பாதை வழியாக கடல் அலைகள் வரும் இடம் வரை சென்று மகிழ்ந்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளும் மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்பட்டு வருகிறது. இது மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியை மட்டுமல்லாமல் தன்னம்பிக்கையையும் தந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் அந்த சாய்தளம் இரண்டு நாட்களில் அகற்றப்பட்டுவிடும்.