சென்னை: விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபருக்கு சென்ைன ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கால் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவள்ளூரை சேர்ந்த முனிவேல் என்பவரின் மகன் ஹேம்நாத் (22), கடந்த ஜூலை மாதம் வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதில், அவரது வலது தொடை நசுங்கியது. அவரை மீட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சை, கண்காணிப்புக்கு பின் அவருக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தி ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பிளாஸ்டிக் அன்ட் ரீ கன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி துறை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விபத்தில் படுகாயமடைந்த வாலிபருக்கு, டாக்டர்கள் ஜெகன்மோகன், ஸ்ரீதேவி, வெள்ளையங்கிரி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் வேக்கூம் தெரபி முறையில் நான்கு முறை காயத்தை சுத்தம் செய்வதற்கான சிகிச்சை அளித்தனர்.