சென்னை: தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை வளாகத்தில் நேற்று முன்தினம் மாலை, கொசு மருந்து அடிக்கும் பணியில் ஆதம்பாக்கத்தை ேசர்ந்த சுதாகர் (40) ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத நிலையில் இயந்திரம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ஊழியர் சுதாகர் படுகாயமடைந்தார். அவரை மீட்டு கே.ேக.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிதனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.