திருவாரூர்: துருக்கியில் இருந்து தமிழகத்துக்கு 500 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ேநற்று அளித்த பேட்டி: நவம்பர், டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பது வழக்கமானது தான். இந்தாண்டு பெரிய வெங்காயம் விளையக்கூடிய மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழையால் பயிர் அழுகி விளைச்சல் குறைந்ததால் விலையேற்றம் உள்ளது.
இதனால் தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகளில் பெரிய வெங்காயம் கிலோ 40க்கு விற்கப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் தேவையான அளவு தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. இன்னும் 10 நாளில் சின்னவெங்காயம் அறுவடை துவங்கி விடும். அதன்பிறகு சின்ன வெங்காயத்தின் விலை குறையும்.