சேலம்: சேலம் அருகே தனியார் சொகுசு பஸ்சில், கோவை எல்ஐசி ஏஜென்டிடம் ₹1 கோடி பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை திருநகர் 2வது வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(59). இவர் ஆர்டரின் பேரில் தங்க நகை செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் ஹரிஷ்(32), எல்ஐசி ஏஜென்ட். இவர், கடந்த 8ம் தேதி, 2.6 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் விற்க பஸ்சில் புறப்பட்டுச் சென்றார். அங்கு ₹1 கோடிக்கு நகையை விற்று விட்டு, பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு, சேலம் வழியே கோவை செல்ல தனியார் சொகுசு பஸ்சில் புறப்பட்டார். அந்த பஸ், நேற்று காலை 7 மணிக்கு சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடிக்கு வந்தது. அப்போது, பயணிகள் காலைக்கடனை கழிக்க வசதியாக கழிவறை அருகே பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.