×

சான்றிதழுக்கு 500 லஞ்சம் சுகாதார ஆய்வாளருக்கு 4 ஆண்டு சிறை

நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே கொட்டாரம் மிஷன் காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (50). கன்னியாகுமரி சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.  2013ல் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஞானமணி என்பவர் மகளுக்கு பிறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.

அவரிடம் ரூ 500 வாங்கிய போது ராஜேஸ்வரனை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை நாகர்கோவில் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அருணாசலம் விசாரித்து ராஜேஸ்வரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


Tags : inspector ,health inspector ,prison , 500 bribe , certificate, health inspector, 4 years in prison
× RELATED காவலர்கள், அரசு அலுவலர்கள் அஞ்சல் வாக்குப்பதிவு: அதிகாரிகள் ஆய்வு