சென்னை: பணியில் இருந்து நீக்கிய விரக்தியில் 108 கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த முன்னாள் டிரைவரை போலீசார் கைது செய்தனர். சென்னை தேனாம்பேட்டையில் 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இங்கு, கடந்த வாரம் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘108 கட்டுப்பாட்டு அறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடிக்கும்’ என்று கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். உடனே, ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அறையை விட்டு வெளியேறினர். பின்னர், தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என தெரிந்தது.