கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த நடூரில் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். இது தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் ஜவுளிக்கடை உரிைமயாளர் சிவசுப்பிரமணியத்தை செய்து கைது கோவை சிறையில் அடைத்தனர். அவர் ஜாமீன் கேட்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அவரது வக்கீல் வாதாடுகையில், சிவசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமாக உள்ளது.