கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கவர்னர் ஜக்தீப் தங்கருக்கு செக் வைக்கும் வகையில், புதிய சட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது.
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களும் கவர்னர்தான் வேந்தர். இதனால் பல்கலைக் கழகங்கள் அனைத்து நேரடியாக கவர்னருடன்தான் தகவல் தொடர்பை வைத்து வந்தன.இந்நிலையில், மாநில அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வரும் கவர்னருக்கு செக் வைக்கும் வகையில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் புதிய சட்ட மசோதா ஒன்றை நேற்று தாக்கல் செய்தது.