மதுரை: கத்தி திரைப்படம் தொடர்பான வழக்கில் இருந்து நடிகர் விஜய், தயாரிப்பு நிறுவனம், ஒளிப்பதிவாளர் உள்ளிட்டோரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விடுவித்துள்ளது. இந்த வழக்கில் இயக்குநர் முருகதாஸை மட்டுமே எதிர்மனுதாரராக சேர்த்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கத்தி திரைப்படத்தையும், தாகபூமி குறும்படத்தையும் தஞ்சாவூர் நீதிமன்ற நீதிபதி பார்க்க வேண்டும், படத்தை பார்த்த பின் புகார்தாரர் கூறும் ஒற்றுமை இருந்தால் விசாரணை நடத்தலாம் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.