சென்னை: கியார் புயலில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க கோரிய வழக்கில் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மீனவர்களை கண்டுபிடிக்க தேடுதல், மீட்புக் குழு அமைக்க கோரி குளச்சலை சேர்ந்த ஹண்டோ என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கியார் புயலுக்கு முன்பு கடலுக்கு சென்ற குமாரி மாவட்ட மீனவர்கள் 59 பேர் இன்னும் கரை திரும்பவில்லை.