ஈரோடு: ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களின் புகார்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பர்கூர் பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பழங்குடியின மக்கள் போராட்டம் நடத்தினர்.