×

திருகார்த்திகை திருவிழா: மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று, திருகார்த்திகையையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  இதில், மல்லிகை ஒருகிலோ ரூ.2ஆயிரம் வரை விற்பனையானது. இன்று 10ம் தேதி  திருகார்த்திகை தீப வழிபாடு மற்றும் நாளை சுபமுகூர்த்த நாள் என்பதால், பொள்ளாச்சி மார்க்கெட்டில் நேற்று காலை முதல், பூக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. இதனால், மார்க்கெட்டில் அனைத்து வகையான பூக்களும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, ஒருகிலோ மல்லிகை ரூ.1800 முதல் ரூ.2000வரையிலும், முல்லை ரூ.750 முதல் ரூ.900வரையிலும் விற்பனையானது. மேலும், ஜாதிமுல்லை ரூ.800க்கும், சம்பங்கி ரூ.250க்கும், அரளி  ரூ.400க்கும், சில்லிரோஸ் ரூ.300க்கும், செவ்வந்தி ரூ.300க்கும் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Market Festival , Festival
× RELATED பழனி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில்...