பந்தலூர் அருகே கூட்டமாக சுற்றித்திரியும் யானைகள்

பந்தலூர்: பந்தலூர் அருகே கூவமூலை மற்றும் ரிச்மண்ட் பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து கூட்டமாக உலா வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளான கூவமூலை, ரிச்மண்ட், தேவகிரி, கொளப்பள்ளி, அய்யன்கொல்லி, பிதர்காடு, சேரம்பாடி காப்பிக்காடு, எலியாஸ்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். கூவமூலை மற்றும் ரிச்மண்ட் பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக 15க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்கள் தேயிலைத்தோட்டத்திற்குள் பசுந்தேயிலை பறிப்பதற்கும், பிறப்பணிகளில் ஈடுபடுவதற்கும் அச்சப்படுகின்றனர்.

இதைத்தொடர்ந்து தேவாலா வனத்துறையினர் அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் யானை நடமாட்டம் உள்ள பகுதியில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: