ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய தண்டவாளத்தில் ஓடியவரை துரத்தி ஓடி வந்த மனைவி

காரைக்குடி: ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய தண்டவாளத்தில் ஓடியவரை பின் தொடர்ந்து, மனைவியும் ஓடி வந்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கற்பகவிநாயகர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(45). இவரது மனைவி வசந்தி. 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியினரிடையே குடும்ப பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மனைவியுடன் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

உடனே தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி விட்டு, நேற்று மாலை ஸ்ரீராம் நகர் பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுப்பிரமணி ஓடினார். அவரது மனைவி வசந்தி சத்தம் போட்டுக்கொண்டே பின்னால் ஓடி வந்தார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், சுப்பிரமணியை தடுத்து நிறுத்தினர். தகவலறிந்து வந்த காரைக்குடி போலீசார் சுப்பிரமணிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

Related Stories: