காரைக்குடி: ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்ய தண்டவாளத்தில் ஓடியவரை பின் தொடர்ந்து, மனைவியும் ஓடி வந்த சம்பவம் காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கற்பகவிநாயகர் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(45). இவரது மனைவி வசந்தி. 2 குழந்தைகள் உள்ளனர். தம்பதியினரிடையே குடும்ப பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மனைவியுடன் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.