ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏனாதி கிராம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ரூ.5 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றத் தேர்தலில் மோதலை தவிர்ப்பதற்காகவே பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்து உள்ளதாக ஊர்மக்கள்விளக்கமளித்துள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்பட்டதற்கு ஏனாதி கிராம இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.