சென்னை: சென்னை ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல் உரிமையாளரின் மகன் சுந்தரலிங்கத்திடம் ரூ.8 லட்சம் பணம் மோசடி செய்துள்ளனர். நாசிக்கில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் ரூ.8 லட்சத்துக்கு சுந்தரலிங்கம் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளார். வெங்காயம் அனுப்பியவரின் வங்கி கணக்கு எண்ணை மறைத்த லாரி ஓட்டுனர் தன்னுடைய வங்கி எண்ணை சுந்தரலிங்கத்திடம் கொடுத்துள்ளார். நாசிக் வெங்காய வியாபாரியுடைய வங்கி கணக்கு எண் நினைத்து ரூ.8 லட்சத்தை ஓட்டுனர் பிரகாஷின் கணக்கில் செலுத்தியுள்ளார்.