திருமலை: ஆந்திர அருகே உழவர் சந்தையில் வெங்காயம் வாங்க வரிசையில் காத்திருந்த முதியவர் மாரடைப்பால் இறந்தார். ஆந்திரா முழுவதும் உழவர் சந்தைகளில் அரசு ஒரு கிலோ வெங்காயம் 25க்கு விற்பனை செய்கிறது. ஒருவருக்கு ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்படுகிறது. உழவர் சந்தைகளில் வெங்காயத்தின் விலை குறைவாக இருப்பதால் ஏழை, பணக்காரர் என்ற பேதம் இல்லாமல் அனைவரும் வரிசையில் நின்று வெங்காயம் வாங்கி செல்கின்றனர். இதனால் உழவர் சந்தைகளில் மூன்று கி.மீ. தொலைவு வரை வெங்காயத்தை வாங்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் உழவர் சந்தைகளில் வெங்காயம் விற்பனை நடைபெற்றது.