பட்ககான்: ``பாஜ அரசால் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை மீட்டு கொடுப்போம்’’ என ஜார்கண்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உறுதியளித்தார். ஜார்க்கண்டில் 3ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பட்ககான் பகுதியில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசியதாவது: ஜார்கண்டில் காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 2 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மேலும் பாஜ ஆட்சியில் கட்டாயப்படுத்தி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிலம், நீர், இடங்கள் உள்ளிட்டவை மீட்டுக்கொடுக்கப்படும். பாஜ ஆட்சியில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.