சென்னை: நண்பர்களாக இருப்பவர்கள் ‘லவ் யூ சொல்லி முத்தமா கொடுப் பார்கள்?’என நடிகை ஜெயஸ்ரீ கேள்வி எழுப்பியுள்ளார். சின்னத்திரை நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ. இவரும் சின்னத்திரை நடிகை. இந்நிலையில் டி.வி. தொடர் நடிகை மகாலட்சுமியுடன் கணவர் ஈஸ்வருக்கு தொடர்பு இருப்பதாகவும் இதுதொடர்பான வாக்குவாதத்தில் ஈஸ்வர் தன்னை உதைத்ததாகவும் போலீசில் ஜெயஸ்ரீ புகார் செய்தார். இதனால் ஈஸ்வர் கைதாகி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதன்பின்னும் பிரச்னை நிற்கவில்லை. இருவரும் மாறிமாறி பேட்டி கொடுத்து வருகின்றனர். சென்னையில் நேற்று ஜெயஸ்ரீ அளித்த பேட்டி: ஈஸ்வரும் மகாலட்சுமியும் நாங்கள் நண்பர்கள் என்கிறார்கள். எந்த நண்பர்களாகவது லவ் யூ சொல்லி கிஸ் அடிப்பார்களா.