×

நண்பர்களாக இருப்பவர்கள் ‘லவ் யூ சொல்லி முத்தமா கொடுப்பார்கள்?’ கணவரின் சில்மிஷம் பற்றி சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ கேள்வி

சென்னை: நண்பர்களாக இருப்பவர்கள் ‘லவ் யூ சொல்லி முத்தமா கொடுப் பார்கள்?’என நடிகை ஜெயஸ்ரீ கேள்வி எழுப்பியுள்ளார்.  சின்னத்திரை நடிகர் ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ. இவரும் சின்னத்திரை நடிகை. இந்நிலையில் டி.வி. தொடர் நடிகை மகாலட்சுமியுடன் கணவர் ஈஸ்வருக்கு தொடர்பு இருப்பதாகவும் இதுதொடர்பான வாக்குவாதத்தில் ஈஸ்வர் தன்னை உதைத்ததாகவும் போலீசில் ஜெயஸ்ரீ புகார் செய்தார். இதனால் ஈஸ்வர் கைதாகி சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதன்பின்னும் பிரச்னை நிற்கவில்லை. இருவரும் மாறிமாறி பேட்டி கொடுத்து வருகின்றனர்.  சென்னையில் நேற்று ஜெயஸ்ரீ  அளித்த பேட்டி: ஈஸ்வரும் மகாலட்சுமியும் நாங்கள் நண்பர்கள் என்கிறார்கள். எந்த நண்பர்களாகவது லவ் யூ சொல்லி கிஸ் அடிப்பார்களா.

இவர்கள் செய்தார்கள். என் கணவருடனான உறவை இப்போதே முடித்துக்கொள்ளுங்கள் என மகாலட்சுமியிடம் கேட்டேன். எனக்கு கஷ்டமாகவுள்ளது என்றும் கூறினேன். அதற்கு அவர், ‘அவன்தான் உன்னுடன் வாழப்பிடிக்கவில்லை என்கிறானே. விட்டுப் போக வேண்டியதுதானே. இன்னும் ஏன் அங்கு இருக்கிறாய்’ என்று கேட்டார்.  ‘நீ யார் அதை முடிவு செய்ய..’ என்று மகாலட்சுமியிடம் நான் கேட்டேன். அதற்கு மகாலட்சுமி, ‘இனி எல்லாமே நான்தான் முடிவு செய்வேன்’ என்றார். இதற்கு என்ன அர்த்தம். எல்லா ஆதாரமும் என்னிடம் இருக்கிறது.  ஈஸ்வர் ஏன் இப்படி அல்பமாக நடந்துகொள்கிறார் என்று தெரியவில்லை.  இவ்வாறு ஜெயஸ்ரீ  கூறினார்.



Tags : Jaisree ,Friends ,Actress Jayasree , Husband, film actress Jayasree
× RELATED துபாயில் 2 ஆண்டுகளில் பெய்ய வேண்டிய...