×

17 பேர் பலியான வழக்கு ஜவுளிக்கடை உரிமையாளர் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் கிராமத்தில் கடந்த வாரம் 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் 17 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசார் பிரபல ஜவுளிக்கடை உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்தனர். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சிவசுப்பிரமணியன், ஜாமீன் கேட்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு மீதான விசாரணை நீதிபதி சக்திவேல் முன்னிலையில் நேற்று நடந்தது. அப்போது விசாரணையை இன்றைக்கு (10ம் தேதி) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.



Tags : owner , 17 kills, owner of a casket, deferred
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...