சென்னை: இலங்கை அருகே வளி மண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து கடந்த வாரம் தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் இந்த மே மாதத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு போக்க முடியும். இருப்பினும் இந்த ஆண்டுக்கான இயல்பு மழை அளவை இன்னும் எட்டவில்லை. இந்த ஆண்டுக்கான பருவமழை காலம் முடிவடைய இன்னும் 20 நாட்கள் உள்ள நிலையில் தற்போது வறண்ட வானிலை ஏற்பட்டுள்ளது.