திருச்சி: தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சார்பற்றது) மற்றும் பொதுநல அமைப்புகள், சமூக நீதி பேரவை ஆகியவை சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் காம்பவுண்ட் சுவர், மாநகராட்சி, காந்தி மார்க்கெட் மற்றும் மாநகர், மாவட்டம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த சுவரொட்டியில், வெங்காயம் விலை கிலோ ரூ220க்கு உயர்ந்துள்ளது. இதனால் பெண்களின் கண்களில் கண்ணீர் வருகிறது. இயற்கை பேரிடர் பாதிப்பு, உற்பத்தி பொருளுக்கு உரிய விலையின்றி கடன் தொல்லையால் வேதனை அடைந்துள்ளனர்.