×

சத்தியமூர்த்திபவனில் முதியவர் திடீர் மரணம் : காங்கிரசார் அதிர்ச்சி

சென்னை: காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முதியவர் ஒருவர் திடீரென இறந்த சம்பவம் காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் சோனியா காந்தி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் கலந்துகொண்ட காங்கிரஸ் தலைவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து, சில தொண்டர்கள் சத்தியமூர்த்தி பவனில் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றனர்.

அப்போது, அங்குள்ள சுவர் ஒன்றில் ஒரு முதியவர் உட்கார்ந்திருந்த நிலையில் இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இறந்ததாக கூறப்படுகிறது. அவரது பெயர் முருகேசன் (60) என்பதும், அவர் சத்தியமூர்த்தி பவனில் நீண்ட ஆண்டுகளாக காங்கிரஸ் கொடி மற்றும் சால்வைகள், காங்கிரஸ் தலைவர்கள் தலைவர்கள் படங்களை விற்று வந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரது இறப்பை கேள்விப்பட்ட காங்கிரசார் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : death , sudden death, elderly man, Satyamurpivan,Congressional shock
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு