வீடுகளின் பூட்டை உடைத்து 1 லட்சம், 16 சவரன் திருட்டு

தண்டையார்பேட்டை: பெரம்பூர் பட்டேல் சாலையில் வசிப்பவர் சந்திரா  (69). கணவர் இறந்து விட்டதால், தனியாக வசித்து வருகிறார். இவர், கடந்த வாரம் சூளை பகுதியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில், நேற்று காலை சந்திரா வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டினர் தகவல் கொடுத்தனர். உடனே அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் மற்றும் 12 சவரன் திருடு போனது தெரிந்தது.  இதுகுறித்து சந்திரா ெகாடுத்த புகாரின் பேரில், செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்:  சூளைமேடு ஆண்டவர் தெருவை சேர்ந்தவர் பானு (68). இவர், கடந்த 6ம் தேதி உறவினர் திருமணத்துக்காக  ஐதராபாத்திற்கு குடும்பத்துடன் சென்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் சூளைமேடு போலீசார் மற்றும் பானுவுக்கு தகவல்  கொடுத்தனர். முதற்கட்ட விசாரணையில், பீரோவில் இருந்த 4 சவரன்  நகை மற்றும் ஒரு லேப்டாப் மாயமாகி இருந்தது. இதுகுறித்து பானு செல்போனில்  அளித்த தகவலின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: