புழல் சிறை கைதி சாவு

புழல்: சவுகார்பேட்டை, சின்னதம்பி சாலையை சேர்ந்த தினேஷ்குமார் (26) என்பவர், கொத்தவால்சாவடி காவல்நிலைய பகுதியில் போதையில் சுற்றியபோது போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் கைதாகி, புழல் சிறயைில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தினேஷ்குமாருக்கு கை, கால்களில் நடுக்கம் ஏற்பட்டதால் கடந்த 28ம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த தினேஷ்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.

Related Stories: