அண்ணாநகர்: சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர், ‘‘வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது விரைவில் வெடிக்கும்,’’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். உடனே, இதுபற்றி வில்லிவாக்கம் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாந்திதேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனை செய்தனர்.