சென்னையின் எப்சி ஏமாற்றம்

ஜாம்ஷெட்பூர் எப்சி அணிக்கு எதிராக நேற்று இரவு நடந்த ஐஎஸ்எல் ஆட்டத்தில் சென்னையின் எப்சி அணி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. அந்த அணியின் வால்ஸ்கிஸ் 26வது நிமிடத்தில் கோல் போட்டார். ஜாம்ஷெட்பூர் வீரர் ஈசாக் வான்மல்சாமா 89வது நிமிடத்தில் கோல் அடித்தார். கடைசி நிமிடங்களில் கோல் விட்டுக்கொடுத்து டிரா செய்ததால் சென்னையின் எப்சி வீரர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். டாடா ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில் ஒரு விறுவிறுப்பான காட்சி.

Related Stories: