சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நீரில் மூழ்கி இரண்டு மாணவர்கள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஐ.டி.ஐ படிக்கும் 7 மாணவர்கள் இன்று மாலை பெசன்ட் நகர் கடற்கரையில் குளிக்க சென்றுள்ளனர். பெசன்ட் நகர் கடற்கரையில் குளிக்க போலீசார் தடைவிதித்திருந்த நிலையில், மாணவர்கள் அனைவரும் தடையை மீறி கடற்கரையில் குளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் 7 பேரும் கடலில் குளித்து கொண்டிருந்த போது அதில் 3 மாணவர்கள் திடீரென மாயமாகியுள்ளனர். எஞ்சிய மாணவர்கள் மூழ்கிய மாணவர்களை கண்டுபிடிக்க முயன்றுள்ளனர். பிறகு எங்கு தேடியும் மாணவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து உடனடியாக அருகிலிருக்கும் சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.