அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ளஆரம்ப சுகாதாரநிலைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறந்தாங்கியை அடுத்த புதுவாக்கோட்டையில் கடந்த 1984ம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. தொடக்கத்தில் இந்த சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் பணிக்கு வந்தனர். நாளடைவில் மருத்துவர்கள் இந்த சுகாதார நிலையத்திற்கு வராததால், சுகாதார நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து சுகாதார நிலையத்திற்கு கட்டப்பட்ட கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டது. இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் இந்த கட்டிடம் சேதமடைந்ததால், அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டப்பட்ட கட்டிடம் பராமரிப்பு இல்லாததால், முற்றிலும் சேதமடைந்துள்ளது.இந்த சுகாதார நிலையத்திற்கு அருகே அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நூலகம், கோயிகள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் நடமாட்டம் உள்ள நேரத்தில் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அறந்தாங்கி அருகே இடிந்து விழும் நிலையில் ஆபத்தான ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்: அகற்ற மக்கள் கோரிக்கை
- ஆபத்தான ஆரம்ப சுகாதார மையம்
- இடிப்பு
- அரந்தங்கி அராந்தங்கி
- ஆபத்தான ஆரம்ப சுகாதார மையம்: மக்களுக்கு அகற்றுதல்