நாகர்கோவில்: தேர்தலை நடத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு செய்ய வேண்டியது எல்லாம் அரசு செய்தது. தேர்தலை நடத்துவதில் முதல்வருக்கு அச்சம் எனவும் தெரிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தல் மக்கள் பங்கேற்பதற்காக இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தல் மறைமுகமானதாக இருக்க கூடாது.