புனே: ‘‘பெண்களின் பாதுகாப்பு உணர்வை உறுதி செய்வதில், போலீஸ் துறையின் பங்கு முக்கியமானது’’ என பிரதமர் மோடி கூறினார்.புனேயில் கடந்த 6ம் தேதி தொடங்கிய போலீஸ் மாநாட்டில் இறுதிநாளான ேநற்று பிர தமர் மோடி கூறியதாவது:
சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடையேயும், குறிப்பாக பெண்கள், குழந்தைகளிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், போலீஸ் துறை மீதான நம்பிக்கையை ஊக்குவிக்கவும் துறை அதிகாரிகள் எல்லா நேரத்திலும் முயற்சிக்க வேண்டும். சாமானிய மக்கள் விரும்பும் படியான, செயல்திறன்மிக்க போலீஸ் படையை உறுதிப்படுத்த தொழில்நுட்பம் ஓர் சிறந்த ஆயுதமாக பயன்படுகிறது. சமூக நலன்களின் பலவீனமான மற்றும் பின்தங்கிய பிரிவினரின் நலனை மனதில் கொண்டு தேசிய நலனுக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.