துரைப்பாக்கம்: சென்னை மாநகராட்சி 15வது மண்டலம் 193வது வார்டுக்கு உட்பட்ட துரைப்பாக்கம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் ரேஷன் கடை உள்ளது. இங்கு தனி நபர் ஒருவர் கழிவுநீர் தொட்டி அமைத்து கழிவுநீரை அகற்றி வருகிறார். இதனால் தொட்டிகள் நிரம்பி ரேஷன் கடை செல்லும் பாதையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் கொசு தொல்ைல அதிகரித்துள்ளதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு செல்லும் இந்த பாதையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கழிவுநீரில் தான் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இங்குள்ள பிள்ளையார் கோயில் தெருவில் கண்ணன் குளம் உள்ளது. இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்கக் கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அப்பகுதியை சேர்ந்த மக்கள் குளத்தை தூர்வாரி சீரமைக்கக் கோரி தனியார் தொண்டு நிறுவனத்தை நாடினர்.