திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் தயார் செய்யக்கூடிய மையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தினந்தோறும் 4 லட்சம் லட்டுகள் தயார் செய்து பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. லட்டு தயாரிப்பதற்காக கோயிலுக்கு வெளியே மையம் அமைக்கப்பட்டு, அங்கு 40 அடுப்புகள் மூலம் பூந்தி தயாரிக்கப்பட்டு கோயிலுக்கு கன்வேயர் பெல்ட் மூலமாக அனுப்பி பின்னர் லட்டு தயார் செய்து கோயிலுக்கு வெளியே கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை லட்டு தயார் செய்வதற்காக பூந்தி தயாரிக்கும் பணியானது நடைபெற்று வந்தது. அப்போது திடீரென பூந்தி தயாரிக்கக்கூடிய அடுப்பின் அருகில் உள்ள சுவற்றிலும் புகை செல்லக்கூடிய கூம்பு குழாயில் படிந்துள்ள நெய் திட்டுக்களில் தீப்பிடித்துக் கொண்டது.